என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் 23 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்5 April 2019 12:08 PM GMT (Updated: 5 April 2019 12:08 PM GMT)
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வீட்டின் கதவை திறந்து பீரோவில் வைத்திருந்த 23 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
தாராபுரம்:
திருப்பூர் குமாரானந்தபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (29). வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருக்கோவிலூர் சென்றார். வீட்டின் சாவியை வெளியே ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு சென்றனர். வெளியூரில் இருந்து பின்னர் வீடு திரும்பினார்கள்.
சாவியை வைத்து இருந்த இடத்தில் இருந்து எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 23 பவுன் நகையை காணவில்லை. அதனை யாரோ திருடி சென்று விட்டனர்.
வீட்டின் சாவியை அவர்கள் மறைத்து வைத்து இருந்த இடத்தை நோட்டமிட்டு அதனை எடுத்து வந்து கதவை திறந்து நகையை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சுரேஷ்குமார் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தனர்.
அதில் 27 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சுரேஷ் குமார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று விட்டு சற்று நேரம் கழித்து வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது.
அப்பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் குமாரானந்தபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (29). வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருக்கோவிலூர் சென்றார். வீட்டின் சாவியை வெளியே ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு சென்றனர். வெளியூரில் இருந்து பின்னர் வீடு திரும்பினார்கள்.
சாவியை வைத்து இருந்த இடத்தில் இருந்து எடுத்து கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 23 பவுன் நகையை காணவில்லை. அதனை யாரோ திருடி சென்று விட்டனர்.
வீட்டின் சாவியை அவர்கள் மறைத்து வைத்து இருந்த இடத்தை நோட்டமிட்டு அதனை எடுத்து வந்து கதவை திறந்து நகையை திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து சுரேஷ்குமார் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தனர்.
அதில் 27 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சுரேஷ் குமார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று விட்டு சற்று நேரம் கழித்து வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது.
அப்பெண் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X