search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் நகை பட்டறை ஊழியரிடம் 60 கிராம் தங்கசெயின் பறிமுதல்
    X

    கோவையில் நகை பட்டறை ஊழியரிடம் 60 கிராம் தங்கசெயின் பறிமுதல்

    கோவையில் இன்று அதிகாலை நகை பட்டறை ஊழியரிடம் 60 கிராம் தங்கசெயினை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #LokSabhaElections2019
    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படை அலுவலர் சாய்ராஜ் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை சலீவன் வீதி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் 60 கிராம் எடை கொண்ட 2 தங்க செயின்கள் இருந்தது.

    இதுகுறித்து கேட்டபோது அவர் பொன்னையராஜபுரத்தை சேர்ந்த பிரசாந்த் (வயது 28) என்பதும், நகை பட்டறை ஊழியர் என்பதும் தெரிய வந்தது.

    பட்டறையில் செய்த செயின்களை உரிமையாளரிடம் கொடுக்க செல்வதாக கூறினார்.

    ஆனால் அவரிடம் நகைகளுக்குரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #LokSabhaElections2019



    Next Story
    ×