என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணத்தால் தகராறு- பெண்ணின் தந்தை கைது
Byமாலை மலர்4 April 2019 1:01 PM GMT (Updated: 4 April 2019 1:01 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரின் தந்தையை தாக்கிய பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானபட்டி கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் முனிராஜ்(50). இவரது மகன் ராஜதுரை. இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த நாராயணன்(40) என்பவரது மகள் கிருஷ்ணவேணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர்களுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த நாராயணன் மற்றும் அவரது மனைவி ராதா, மகன்கள் கண்ணன், நாகன் ஆகியோர் முனிராஜியிடம் சென்று நேற்று மாலை தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் மற்றும் அவரது உறவினர்கள் முனிராஜ் மற்றும் அவரது மனைவி ரத்னா ஆகியோரை சராமாரியாக தாக்கினர்.
இதில் காயமடைந்த முனிராஜ் மற்றும் ரத்னா கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த கே.ஆர்.பி.டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X