search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தியால்பேட்டையில் மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை
    X

    முத்தியால்பேட்டையில் மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தீக்குளித்து தற்கொலை

    முத்தியால்பேட்டையில் மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகரை சேர்ந்தவர் வேலப்பன் (வயது 32). லாரி டிரைவர். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    இந்த நிலையில் வேலப்பனுக்கும், வெண்ணிலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் வெண்ணிலா கணவரை விவாகரத்து செய்து விட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் வேலப்பன் மனவேதனை அடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலப்பன் புதுவை வந்தார்.

    பின்னர் அவர் முத்தியால் பேட்டை கணேஷ் நகர் சோலை நகர் மெயின் ரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

    மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனவேதனையில் இருந்த வேலப்பன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மாலை அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    உடலில் தீப்பிடித்ததும் அவர் கூச்சல் போட்டு அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வேலப்பன் உடலில் பிடித்த தீயை அணைத்தனர்.

    இருப்பினும் அவரது உடல் கருகியது. உடனடியாக அவரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வேலப்பன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×