search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவையாறு அருகே டாஸ்மாக் ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    திருவையாறு அருகே டாஸ்மாக் ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    திருவையாறு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த டாஸ்மாக் ஊழியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவையாறு:

    திருவையாறு அடுத்த அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 46). இவர் டாஸ்மார்க் கடை சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். குடும்பத்துடன் பள்ளியக்ரஹாரம் ஆர்.வி.எஸ் நகரில் வசித்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் உண்டு.

    இதனால் வயிற்றுவலி ஏற்பட்டு மஞ்சகாமாலை நோயால் அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டிலேயே வி‌ஷம் குடித்து மயங்கிவிட்டார் உடனே அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். 

    இது குறித்து ஆனந்தி கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×