என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துடியலூர் சிறுமி கொலை: கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு
Byமாலை மலர்3 April 2019 10:12 AM GMT (Updated: 3 April 2019 10:12 AM GMT)
கோவை துடியலூர் சிறுமி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். #GirlHarassment
கோவை:
கோவை துடியலூரில் கடந்த 25-ந்தேதி மாயமான 7 வயது சிறுமி அடுத்த நாள் வீட்டருகே பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடந்த பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தொண்டாமுத்தூர் உளியம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 34) என்ற வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமாரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோவை கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம். கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் சந்தோஷ் குமாரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வோம்.
அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் மருத்துவ அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளோம்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தோஷ்குமார் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். #GirlHarassment
கோவை துடியலூரில் கடந்த 25-ந்தேதி மாயமான 7 வயது சிறுமி அடுத்த நாள் வீட்டருகே பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடந்த பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தொண்டாமுத்தூர் உளியம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 34) என்ற வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ்குமாரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோவை கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம். கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் சந்தோஷ் குமாரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வோம்.
அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் மருத்துவ அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளோம்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தோஷ்குமார் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். #GirlHarassment
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X