search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரம் அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் நகை கொள்ளை
    X

    தாம்பரம் அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் நகை கொள்ளை

    தாம்பரம் அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் பகத்வாரியா. ராஜஸ்தானில் விமானப்படை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி சந்தியா தேவி. இவர் கடந்த 1-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர்களுடன் ராமேஸ்வரம் சென்றார். இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்ட 6 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×