என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் உள்ளது- வேல்முருகன்
Byமாலை மலர்3 April 2019 8:20 AM GMT (Updated: 3 April 2019 8:20 AM GMT)
தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் உள்ளதாகவும் தேர்தலுக்குப் பிறகு நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். #TamilagaVazhvurimaiKatchi #Velmurugan
பீளமேடு:
கோவையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறுவதுடன், எங்களால் முடிந்த சிறிய உதவி செய்யப்படும். மாலை தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்.
ராமதாஸ் பொய்யான, உண்மைக்கு மாறான கூட்டணியை மாறி மாறி வைத்து வருகிறார். இதுவரை தேர்தல் ஆணையம் எனக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கவில்லை. 40 தொகுதிகளில் நான் பிரசாரம் செய்வதை மோடி, எடப்பாடி அரசு தடுக்கிறது. எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் உள்ளது. தேர்தலுக்கு பிறகு நீதிமன்றத்தை நாட உள்ளேன்.
கலைஞர் ஆட்சியில் தான் வன்னியருக்கான இட ஒதுக்கீடு கிடைத்தது. தி.மு.க., கம்யூனிஸ்ட் தொகுதிகளில் மட்டுமே எனது ஆதரவு. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஏமாற்றியுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கடந்த 7 ஆண்டுகளாக நான் மக்களை திரட்டி நடத்திய போராட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஓரளவு குறிப்பிடப்பட்டு உள்ளதால் நான் ஆதரவு அளித்துள்ளேன். 7 பேர் விடுதலை தொடர்பாக ராகுல் காந்தியிடம் பேசி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilagaVazhvurimaiKatchi #Velmurugan
கோவையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறுவதுடன், எங்களால் முடிந்த சிறிய உதவி செய்யப்படும். மாலை தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன்.
ஸ்டாலின் பதில் என்ற அடிப்படையில் பா.ம.க. ராமதாஸ் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க ஜமக்காளத்தில் வடிக்கட்டிய பொய்.
ராமதாஸ் பொய்யான, உண்மைக்கு மாறான கூட்டணியை மாறி மாறி வைத்து வருகிறார். இதுவரை தேர்தல் ஆணையம் எனக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கவில்லை. 40 தொகுதிகளில் நான் பிரசாரம் செய்வதை மோடி, எடப்பாடி அரசு தடுக்கிறது. எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் உள்ளது. தேர்தலுக்கு பிறகு நீதிமன்றத்தை நாட உள்ளேன்.
கலைஞர் ஆட்சியில் தான் வன்னியருக்கான இட ஒதுக்கீடு கிடைத்தது. தி.மு.க., கம்யூனிஸ்ட் தொகுதிகளில் மட்டுமே எனது ஆதரவு. கடந்த காலங்களில் காங்கிரஸ் ஏமாற்றியுள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கடந்த 7 ஆண்டுகளாக நான் மக்களை திரட்டி நடத்திய போராட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் ஓரளவு குறிப்பிடப்பட்டு உள்ளதால் நான் ஆதரவு அளித்துள்ளேன். 7 பேர் விடுதலை தொடர்பாக ராகுல் காந்தியிடம் பேசி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilagaVazhvurimaiKatchi #Velmurugan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X