என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற கார் டிரைவர் கைது
புதுச்சேரி:
புதுவையில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் புதுசாரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சாரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்குள்ள மதுக்கடை அருகே ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த வண்டு மணி (30) என்பதும், இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதும் தெரிய வந்தது.
மேலும் இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். வண்டுமணி கோவிந்தசாலையை சேர்ந்த வனராஜ் என்பவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வண்டு மணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் ரொக்க பணம் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாகி விட்ட வனராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்