என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவனியாபுரத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்2 April 2019 10:26 AM GMT (Updated: 2 April 2019 10:26 AM GMT)
அவனியாபுரத்தில் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அவனியாபுரம்:
மதுரை அவனியாபுரம் மாநகராட்சி காலனியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் பாலுத்தாய் (வயது 35). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பாலுத்தாயை பின்தொடர்ந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் பாலுத்தாயை சரமாரியாக தாக்கி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நகை பறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமிரா இருப்பது கண்டறியப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது நகை திருடர்களின் காட்சி பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X