search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் ஒன்றிய பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்குசேகரிப்பு
    X

    கரூர் ஒன்றிய பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்குசேகரிப்பு

    கரூர் ஒன்றிய பகுதியில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    நொய்யல்:

    கரூர் ஒன்றியம் கடம்பன்குறிச்சி, நன்னியூர், நெரூர் வடபாகம், நெரூர் தென்பாகம், சோமூர், கோயம்பள்ளி, வாங்கல் பசுபதிபாளையம், புஞ்சைபுகளூர், புஞ்சை தோட்டக்குறிச்சி, திருக்காடுதுறை, நன்செய்புகளூர், கோம்புபாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

    அப்போது அவர் பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் மற்றும் மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்டவுடன் விவசாய கடன், கல்விக்கடன் ரத்து செய்யப்படும். நிலம் இல்லாத வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். 

    இந்த தொகுதிக்கு எதுவும் செய்யாத தம்பிதுரையை இந்தத் தேர்தலில் தள்ளுபடி செய்து கை சின்னத்திற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும். என்றார். வாக்கு சேகரிப்பின்போது, கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி, நன்னியூர் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சின்னசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் சுப்பிரமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில வர்த்தக அணி செயலாளர் விசா.சண்முகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். 
    Next Story
    ×