என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வீராம்பட்டினத்தில் மீனவரை தாக்கி கொலை மிரட்டல்- வாலிபர் கைது
பாகூர்:
வீராம்பட்டினம் நாகூரான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது36), மீனவர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவிதா கடந்த 6 மாதமாக கணவரை விட்டு பிரிந்து முதலியார்பேட்டையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கவிதா தனக்கு அளித்த தாய்வீட்டு சீதனங்களை கணவர் வீட்டில் இருந்து எடுத்து வரும்படி அரியாங்குப்பம் சண்முகா நகரை சேர்ந்த செந்தில் (30) மற்றும் ராம்ஜி நகரை சேர்ந்த ரமணா ஆகியோரிடம் கூறினார்.
அதன்படி செந்திலும், ரமணாவும் வீரப்பன் வீட்டுக்கு சென்று அங்கிருந்த பொருட்களை எடுக்க முயன்றனர். ஆனால் இதற்கு வீரப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த செந்திலும், ரமணாவும் சேர்ந்து உருட்டு கட்டையால் வீரப்பனை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்றனர்.
இதுகுறித்து வீரப்பன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து செந்திலை கைது செய்தார். ரமணாவை தேடி வருகிறார். மேலும் இந்த சம்பவத்துக்கு காரணமான கவிதா மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்