search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே டிராக்டர் மோதி பள்ளி மாணவன் பலி -தாய் படுகாயம்
    X

    கரூர் அருகே டிராக்டர் மோதி பள்ளி மாணவன் பலி -தாய் படுகாயம்

    கரூர் அருகே மொபட் மீது டிராக்டர் மோதியதில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானான். அவரது தாய் படுகாயம் அடைந்தார்.
    கரூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் வடக்கூர் தெருவை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா. இவரது மகன் முகமது இப்ராகிம் (வயது 14). மோகனூர் அரசு பள்ளியில் 8-ம்வகுப்பு படித்து வந்தான்.

    சம்பவத்தன்று முகமது இப்ராகிம் அவனது தாய் பாத்திமா பேகத்துடன் கரூர் மாவட்டம் வாங்கல் கடைவீதியில் மொபட்டில் சென்றான். மொபட்டை அவனே ஓட்டிச்சென்றான். 

    இந்தநிலையில் அந்த வழியாக வந்த டிராக்டர், மொபட்டின் பின்புறம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது இப்ராகிம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தான். பாத்திமா பேகம் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×