search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவோணம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
    X

    திருவோணம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

    திருவோணம் அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவோணம்:

    திருவோணம் அருகே உள்ள செவ்வாய்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். தொழிலாளி. இவருடைய மகள் பிரவிகா(வயது15). இவர் திருவோணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் அறிவியல் தேர்வு எழுதினார்.

    நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை மூடிவிட்டு பிரவிகா வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் உடல் கருகிய பிரவிகா அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    ஆனால் மாணவி பிரவிகா அதற்குள் இறந்து விட்டார்.

    இது குறித்து மாணவியின் தாய் மகாராணி அளித்த புகாரின்பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவிகா உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×