search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அண்ணாசாலையில் செல்போன் கடையில் திருடிய சென்னை வாலிபர் கைது
    X

    புதுவை அண்ணாசாலையில் செல்போன் கடையில் திருடிய சென்னை வாலிபர் கைது

    புதுவை அண்ணாசாலை யில் செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 செல்போன்கள் மீட்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட் டையை சேர்ந்தவர் சதீஷ், இவர் அண்ணாசாலையில் செல்போன்கடை வைத்துள்ளார். கடந்த 19-ந் தேதி இரவு சதீஷ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்தனர். கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடி சென்று விட்டனர். இந்த கொள்ளை குறித்து சதீஷ் பெரிய கடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரே கைகளை பதிவு செய்தனர்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் 3 மர்ம மனிதர்கள் நடமாடியது தெரிந்தது. அதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது செல்போன் கடையில் திருடியது சென்னையை சேர்ந்த விஷ்ணு (21) உள்பட 3 பேர் என்பது தெரிய வந்தது.

    அதைத் தொடர்ந்து பெரிய கடை போலீசாரும், அதிரடிப்படை போலீசாரும் சென்னை சென்று தேடினர். அப்போது போலீசார் வருவதை அறிந்ததும் விஷ்ணு அங்கிருந்து தப்பி காலாப்பட்டு பகுதிக்கு வந்திருப்பது தெரியவந்தது. போலீசார் நேற்று இரவு காலாப்பட்டு பகுதியில் பதுங்கி இருந்த விஷ்ணுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடைய அவரது நண்பர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×