search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் தோல்வியால் தீக்குளித்த தனியார் கம்பெனி ஊழியர் உயிரிழப்பு
    X

    காதல் தோல்வியால் தீக்குளித்த தனியார் கம்பெனி ஊழியர் உயிரிழப்பு

    காதல் தோல்வியால் தனியார் கம்பெனி ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சேதராப்பட்டு:

    பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் பாலாஜி (வயது 27). இவர் அங்குள்ள தனியார் கெமிக்கல் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். 

    இந்த நிலையில் பாலாஜி அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த விவரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் மகளுக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.

    இதனால் பாலாஜி மனமுடைந்தார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது அவர் தான் காதலித்த பெண்ணுக்கு செல்போன் மூலம் நான் வாழ விரும்பவில்லை. சாகப்போகிறேன் என்று எஸ்.எம்.எஸ்.அனுப்பினார்.

    பின்னர் அவர் அதே பகுதியில் உள்ள தனது நண்பர் கார்த்திக் அரவிந்த் வீட்டுக்கு சென்றார். அங்குள்ள காலி மனையில் வைத்து பாலாஜி விஷத்தை குடித்தார். மேலும் தனது கையில் பிளேடால் அறுத்து கொண்டார். உடனே அவரது நண்பர் அவரை காப்பாற்றி அவருக்கு அறிவுரை கூறினார். பின்பு பாலாஜி அங்குள்ள பெட்ரோல் பங்குக்கு சென்றார். அங்கு ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொண்டு சென்ற அவர் தனது உடலில் ஊற்றி கொண்டு தீவைத்து கொண்டார். 

    இதில், அவரது உடல் முழுவதும் கருகியது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    இதுபற்றி தகவல் அறிந்ததும் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் ஆஸ்பத்திரிக்கு சென்று பாலாஜியிடம் மரண வாக்குமூலம் பெற்றார்.அப்போது காதல் தோல்வியால் தீக்குளித்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பாலாஜி பரிதாபமாக இறந்தார்.
    Next Story
    ×