search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
    X

    கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

    கும்பகோணத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் திருப்பனந்தாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (வயது55). இவர் நேற்று கும்பகோணத்திலுள்ள பழனிச்சாமி நகரை சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவரது வீட்டில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது கம்பி இறக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சார வயரில் உரசியதால் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார்.

    இது சம்பந்தமாக கும்பகோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்

    Next Story
    ×