என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல் - திருமணமான 6 மாதத்தில் வரதட்சணை கொடுமை
Byமாலை மலர்27 March 2019 10:58 AM GMT (Updated: 27 March 2019 10:58 AM GMT)
காதல் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே வடமதுரை முத்தனாங் கோட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 21). பட்டதாரி. இவர் பேஸ்புக் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
2 பேரும் நீண்ட நாட்களாக பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளனர். இது காதலாக மாறியது. இருவரும் போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு கார்த்திக் மற்றும் முத்தம்மாள் திருமணம் செய்து கொண்டனர்.
சிறிது காலம் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட தொடங்கியது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.
மேலும் கார்த்திக் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முத்தம்மாள் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.
இது குறித்து விசாரிக்க வடமதுரை அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்படி போலீசார் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews
திண்டுக்கல் அருகே வடமதுரை முத்தனாங் கோட்டையைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 21). பட்டதாரி. இவர் பேஸ்புக் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த முத்தம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
2 பேரும் நீண்ட நாட்களாக பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளனர். இது காதலாக மாறியது. இருவரும் போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு கார்த்திக் மற்றும் முத்தம்மாள் திருமணம் செய்து கொண்டனர்.
சிறிது காலம் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட தொடங்கியது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.
மேலும் கார்த்திக் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முத்தம்மாள் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.
இது குறித்து விசாரிக்க வடமதுரை அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்படி போலீசார் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X