search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவினாசியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு- 2 வாலிபர்கள் கைது
    X

    அவினாசியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு- 2 வாலிபர்கள் கைது

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி கருவலூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை கோவிலின் அருகே நிறுத்திவிட்டு சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து 2 பேரும் அவினாசி போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் அவினாசி டி.எஸ்.பி. பரமசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சம்பங்கி தலைமையில் போலீசார் நேற்று காலை 5 மணி அளவில் கருவலூர் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் திரும்பி தப்பிக்க முயன்றனர். உடனடியாக போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர் .

    விசாரணையில் அவர்கள் 2 பேரும் மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்த ஆசிக் (வயது 21), ரைஸ்தீன் (20) என்பதும் கருவலூர் மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் உள்பட 4 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் 12-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளை திருடியதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×