search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ம.தி.மு.க. துணை பொதுசெயலர் மல்லை சத்யா மாமனாருக்கு கொலை மிரட்டல்
    X

    ம.தி.மு.க. துணை பொதுசெயலர் மல்லை சத்யா மாமனாருக்கு கொலை மிரட்டல்

    மல்லை சத்யா மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் இது குறித்து அவர் போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்துள்ளார். #mallaisathya #mdmk

    சென்னை:

    ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவின் மாமனார் சிவசங்கரன் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    நீலாங்கரையில் எனக்கு சொந்தமான காலிமனையை திருவான்மியூர் பிரஷ்நேஷ், பாலவாக்கம் விஜயபாரதி ஆகியோருக்கு மூன்று வருட காலத்துக்கு கார் நிறுத்துவதற்காக வாடகைக்கு விட்டேன்.

    ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தை மீறி வாகனம் கழுவும் இடமாக மாற்றி நிலத்தை மாசுபடுத்தினர். ஒப்பந்த காலம் முடிந்துவிட்ட நிலையில் இடத்தை காலி செய்யாமல் அத்துமீறி செயல் பட்டு வருகின்றனர். தகாத வார்த்தையால் திட்டியும், குண்டர்கள் மூலம் தொடர்ந்து மிரட்டியும் வருகிறார்கள்.

    எங்களை கொலை செய்யும் திட்டத்தோடு இருக்கும் பிரஷ்நேவ், விஜய பாரதி மற்றும் அவரது கூட்டாளிகள் மகேஷ் உள்ளிட்டோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை மீட்டுத் தந்து எங்கள் குடும்பத்துக்கு தக்க பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது.  #mallaisathya #mdmk

    Next Story
    ×