search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க கனிமொழியை வெற்றிபெற செய்யுங்கள்: வைகோ
    X

    துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க கனிமொழியை வெற்றிபெற செய்யுங்கள்: வைகோ

    துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க கனிமொழியை வெற்றி பெற செய்யுங்கள்“ என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். #Vaiko #kanimozhi #LSPolls
    தூத்துக்குடி :

    தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு நடந்தது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    தமிழர் உரிமைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த கலைஞரின் மகள், இன்றைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர். நாளைய தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். இவர் அன்பும், பரிவும், கனிவும், பாசமும், மனிதாபிமானமும் கொண்ட அணுகுமுறையால், சாதி, மதம், கட்சி கடந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக, மீனவர்களுக்காக, விவசாயிகளுக்காக, வேலையில்லா திண்டாட்டத்தால் வாடி வதங்கும் இளைஞர்களுக்காக மாநிலங்களவையில் குரல் கொடுத்து உள்ளார்.



    பாசிசமா, ஜனநாயகமா என்பதற்காகத்தான் இந்த தேர்தல். ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றியை தாருங் கள். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எங்கள் தங்கை கனிமொழி என்ற நிலையை உருவாக்க வேண்டும். கட்சி பார்க்காமல், சாதி பார்க்காமல், துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க, இந்த தொகுதிக்கு என்ன தேவை என்று திட்டமிட்டு செயலாற்றக்கூடிய கனிமொழியை வெற்றி பெறச் செய்யுங்கள். உங்கள் வாக்குகளை திரட்டுங்கள். சிந்தப்பட்ட ரத்தத்துக்காக, நீதிக்காக வாக்குகளை திரட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், முக்காணி உள்ளிட்ட பகுதிகளில் வைகோ திறந்த வேனில் சென்று கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். #Vaiko #kanimozhi #LSPolls
    Next Story
    ×