search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியாங்குப்பத்தில் மினி வேன் மோதியதில் நர்சிங் கல்லூரி மாணவி படுகாயம்
    X

    அரியாங்குப்பத்தில் மினி வேன் மோதியதில் நர்சிங் கல்லூரி மாணவி படுகாயம்

    அரியாங்குப்பத்தில் மினி வேன் மோதியதில் நர்சிங் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.
    பாகூர்:

    அரியாங்குப்பம் மணவெளி பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவர் பொதுப்பணித்துறையில் மஸ்தூராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் லட்சுமி (வயது 20). இவர் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்.

    இவர் தினமும் சைக்கிளில் வந்து  அரியாங்குப்பம் சந்திப்பில் சைக்கிளை நிறுத்தி விட்டு பஸ்சில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். 
    அதுபோல் நேற்று காலை லட்சுமி கல்லூரிக்கு செல்ல சைக்கிளில் அரியாங்குப்பம் சந்திப்புக்கு வந்தார். அப்போது பின்னோக்கி வந்த மினி வேன் எதிர்பாராத விதமாக லட்சுமி மீது மோதியது. 

    இதில், தூக்கி வீசப்பட்ட லட்சுமி படுகாயம் அடைந்தார். உடனடியாக லட்சுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×