என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை அருகே பெண் உள்பட 3 பேர் தற்கொலை
மதுரை:
மதுரை சோலையழகுபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் முத்துபாலன். இவரது மனைவி ஈஸ்வரி (வயது37). கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாக வில்லை. இதனால் விரக்தி அடைந்த ஈஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஜெய் ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.
மதுரை பீ.பி.குளம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (30). குடிபழக்கத்துக்கு அடிமையானதால் இவருக்கும், மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த விஜய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அய்யர்பங்களா சசி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் (58). குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்தார். தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்