search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட 17 மது பாட்டில்கள் பறிமுதல்
    X

    நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ்சில் கொண்டு வரப்பட்ட 17 மது பாட்டில்கள் பறிமுதல்

    நாகர்கோவில் அருகே இன்று பறக்கும் படை அதிகாரிகள் ஆம்னி பஸ் ஒன்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. வேட்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். பணம் விநியோகம், மதுபானங்கள் சப்ளையை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் அருகே இன்று பறக்கும் படை அதிகாரிகள் ஆம்னி பஸ் ஒன்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் நாகர்கோவில் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் ராஜாக்கமங்கலம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி யில் அதிகாரிகள் நேற்றிரவு நடத்திய வாகன சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சம் சிக்கியது.

    நேற்று காலையில் பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.4 லட்சத்து 92 ஆயிரத்து 720-ம், கிள்ளியூர் தொகுதியில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 500-ம், நாகர்கோவில் தொகுதியில் கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் இதுவரை மாவட்டம் முழுவதும் 13 வாகனங்கள், 11 மிக்சிகள், 39 கிராம் தங்கம், 23 மதுபாட்டில்கள், ரூ.78 லட்சத்து 75 ஆயிரத்து 395 ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×