என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விளாத்திகுளத்தில் காண்டிராக்டரிடம் ரூ. 3 லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல்
விளாத்திகுளம்:
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18-ந் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தி முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் விளாத்திகுளம் விலக்குப்பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பு தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பந்தல்குடியில் இருந்து காமநாயக்கன்பட்டி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது. இதனை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காமநாயக்கன்பட்டியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் தேவசகாயம் என்பதும் அவரது மோட்டார் சைக்கிளில் ரூ. 3 லட்சத்து 88 ஆயிரத்து 500 இருந்ததும் தெரியவந்தது. இதற்கு முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதையடுத்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்து தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் முறையான ஆவணங்களை சமர்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்