search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாடானை பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
    X

    திருவாடானை பஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    திருவாடானை பஸ் நிலையத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி:

    திருவாடானை புதிய பஸ் நிலையத்தில் தினமும் 70-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. திருவாடானை சுற்றுவட்டார பொதுமக்கள் இந்த பஸ் நிலையத்திற்கு வந்துதான் மற்ற ஊர்களுக்கு செல்ல வேண்டும்.

    திருவெற்றியூர் பாகம் பிரியாள் கோவில்,ஓரியூர் அருளானந்தர் ஆலயம் ஆகிய புனித தலங்களுக்குச் செல்பவர்களும் திருவாடானை வந்துதான் செல்ல வேண்டியுள்ளது.

    தொண்டி வரும் மதுரை பஸ் மற்றும் ராமேஸ்வரம் செல்லும் திருச்சி பஸ்களும் திருவாடானை வந்துதான் செல்லவேண்டியுள்ளது. தற்போது இந்த பஸ் நிலையத்தில் அடிக்கடி திருட்டு நடைபெறுகிறது.

    இங்கு கல்லூரி மாணவிகள் வந்து செல்கின்றனர். இவர்களை ஈவ் டீசிங் செய்யும் அட்டகாசங்களும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. இளைஞர்கள் சிலர் பஸ் நிறுத்தும் இடத்தில் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு ஈவ் டீசிங்கில் ஈடுபடுவதாக புகார் வருகின்றனர்.

    எனவே இங்கு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், நிற்க கூட வசதி இல்லாமல் இட நெருக்கடி உள்ள பஸ் நிலையத்தை விரிவுபடுத்தவும் இந்தப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×