search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை அருகே லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    உடுமலை அருகே லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

    குடி பழக்கத்தில் இருந்து விடுபட முடியாத விரக்தியில் லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

    கோவை:

    உடுமலை அருகே உள்ள செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் முத்துக்குமார் (வயது 33). லாரி டிரைவர். திருமணமாகவில்லை. குடிபழக்கத்துக்கு அடிமையான முத்துக்குமார் அதில் இருந்து விடுபடுவதற்காக கடந்த 2 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் குடி பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்த முத்துக்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தான் தங்கி இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து முத்துக்குமாரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×