search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை, மேட்டுப்பாளையத்தில் சொகுசு காரில் கொண்டு வரப்பட்ட ரூ.8½ லட்சம் பறிமுதல்
    X

    கோவை, மேட்டுப்பாளையத்தில் சொகுசு காரில் கொண்டு வரப்பட்ட ரூ.8½ லட்சம் பறிமுதல்

    கோவை, மேட்டுப்பாளையத்தில் சொகுசு காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.8½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். #LSPolls
    கோவை:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி கோவை தெற்கு தொகுதியில் பறக்கும்படை அதிகாரி ஷீலா தலைமையிலான குழுவினர் இன்று கோவை காந்திபுரம் ஜி.பி. சிக்கனல் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.7 லட்சத்து 21 ஆயிரத்து 500 இருந்தது. காரில் கோவை சித்ரா பகுதியை சேர்ந்த மனோ (வயது 29) மற்றும் 2 பேர் இருந்தனர்.

    பணம் குறித்து விசாரித்தபோது வியாபாரத்துக்கு பணம் கொண்டு செல்வதாக கூறினார்.

    இருந்தாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரி அதனை கருவூலத்தில் ஒப்படைத்தார்.

    இதேபோன்று சிறுமுகை சத்தி மெயின் ரோடு கூத்தமண்டிபிரிவில் இன்று காலை பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெத்திக்குட்டையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த கேரளாவை சேர்ந்த பென்னி (44) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் குமரேசன், புனிதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். #LSPolls

    Next Story
    ×