search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்க தடை
    X

    டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது விற்க தடை

    டாஸ்மாக் மதுக்கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வதற்கும் தேர்தல் கமி‌ஷன் தடை விதித்துள்ளது. #LSPolls
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணத்துக்கு அடுத்தப்படியாக அதிக அளவில் புழங்குவது மது பானம்தான்.

    அரசியல் கட்சிகளின் வேலைக்காக வருபவர்களில் பெரும்பாலானவர்கள். மாலை நேரம் ஆகிவிட்டால் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    இதனால் மதுக்கடைகளில் வழக்கத்தைவிட இப்போது மது விற்பனை அதிகமாகி கொண்டு வருகிறது.

    தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்தபிறகு மதுபான கடைகளையும், மது உற்பத்தி தொழிற்சாலைகளையும், கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 19 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து தினமும் எத்தனை லாரிகளில் மது பாட்டில்கள் வெளியே கொண்டு செல்லப்படுகிறது என்பதை கண்காணிக்க இப்போது ஒவ்வொரு தொழிற்சாலை வாசலிலும் சி.சி.டி.வி. கேமரா நிறுவப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு தொழிற்சாலைகளில் இருந்தும் தினமும் 200 லாரிகளில் டாஸ்மாக் குடோன்களுக்கு மதுபாட்டில்கள் அனுப்பப்படுவது வழக்கம்.

    ஆனால் இப்போது இதைவிட அதிகமான லாரிகளில் மது பாட்டில்கள் அனுப்பப்பட்டால் அதற்கான விளக்கத்தையும், மாவட்ட கலெக்டருக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல் டாஸ்மாக் மதுக்கடைகளில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடைகளில் வழக்கமாக நடைபெறும் விற்பனையை விட 20 சதவீதத்துக்கு மேல் விற்பனை அதிகரித்தால் அதற்கான காரணத்தையும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுபற்றி டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய துறையாக டாஸ்மாக் உள்ளது. மது விற்பனை மூலம் கடந்த ஆண்டு மட்டும் ரூ.26 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் வந்துள்ளது.

    இப்போது தேர்தல் நேரம் என்பதால் அனைத்து மதுக்கடைகளிலும் மது விற்பனை அதிகரித்து வருகிறது.

    எனவே இதை கட்டுக்குள் கொண்டு வர மொத்தமாக பெட்டி பெட்டியாக மது விற்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

    சட்டத்துக்கு புறம்பாக கள்ளத்தனமாக மது விற்பனையில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் கூறி உள்ளோம். #LSPolls

    Next Story
    ×