search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாசாலையில் செல்போன் கடையில் கொள்ளை
    X

    அண்ணாசாலையில் செல்போன் கடையில் கொள்ளை

    அண்ணாசாலையில் செல்போன் கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இன்று காலை சதீஷ் வழக்கம் போல் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 10 செல்போன்கள் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து சதீஷ் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க கைரேகை நிபுணர்கள் சென்று கைரேகைகளை பதிவு செய்தனர்.

    செல்போன் கடையில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×