என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அண்ணாசாலையில் செல்போன் கடையில் கொள்ளை
Byமாலை மலர்20 March 2019 1:17 PM GMT (Updated: 20 March 2019 1:17 PM GMT)
அண்ணாசாலையில் செல்போன் கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இன்று காலை சதீஷ் வழக்கம் போல் கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 10 செல்போன்கள் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்து சதீஷ் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க கைரேகை நிபுணர்கள் சென்று கைரேகைகளை பதிவு செய்தனர்.
செல்போன் கடையில் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X