search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் ரெயில் நிலைய தண்டாவாளத்தில் தலைவைத்து வாலிபர் தற்கொலை
    X

    ராமநாதபுரம் ரெயில் நிலைய தண்டாவாளத்தில் தலைவைத்து வாலிபர் தற்கொலை

    தண்டாவளத்தில் தலைவைத்து 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் ரெயில் நிலையத்துக்கு இன்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வந்தார். முதலாவது பிளாட்பாரத்துக்கு வந்த அவர், நடைமேடை முடியும். இடத்தில் இருந்து 100 மீட்டர் வரை சென்றார். அப்போது சென்னையில் இருந்து ராமேசுவரம் சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தது.

    உடனே அந்த வாலிபர் தீடீரென்று தண்டா வளத்தில் தலை வைத்து படுத்துக்கொண்டார். கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் அவர் தலை மீது எறிச்சென்றது. இதில் தலை துண்டான நிலையில் அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து சக்கரக் கோட்டை கிராம நிர்வாக அதிகாரி பிரபாகின் ராமேசுவரம் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். ரெயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனுஷ் கோடி, தனிப்பிரிவு தலைமை காவலர் மல்கோத்ரா பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது ராமநாதபுரம் தங்கப்பா நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் மணிகண்டன்(29) என தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×