என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம் அணை நீர்மட்டம் 38 அடியாக குறைந்தது
Byமாலை மலர்20 March 2019 10:18 AM GMT (Updated: 20 March 2019 10:18 AM GMT)
144 அடி உச்ச நீர்மட்டம் உள்ள பாபநாசம் அணையில் இன்று மிகவும் குறைந்த அளவான 38 அடியே இருந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான பெரிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு மூலம் தான் பெருவாரியான விவசாயம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகப்படியாக திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் வேகமாக குறையத்தொடங்கியது. 144 அடி உச்ச நீர்மட்டம் உள்ள பாபநாசம் அணையில் இன்று மிகவும் குறைந்த அளவான 38 அடியே இருந்தது.
இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 212.25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 50.82 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உள்ளது. அங்கு 70 சதவீத நீர் இருப்பு உள்ளதால் அதன் மூலம் இந்த கோடை காலத்தை சமாளித்து விடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு சேர்வலாறு அணை பழுது பார்க்கும் பணி நடந்ததால் பாபநாசம் அணையில் நீர் திறக்கப்பட்டு வற்ற வைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான பெரிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு மூலம் தான் பெருவாரியான விவசாயம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பாபநாசம், சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் அதிகப்படியாக திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் வேகமாக குறையத்தொடங்கியது. 144 அடி உச்ச நீர்மட்டம் உள்ள பாபநாசம் அணையில் இன்று மிகவும் குறைந்த அளவான 38 அடியே இருந்தது.
இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 212.25 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 50.82 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 83.05 அடியாக உள்ளது. அங்கு 70 சதவீத நீர் இருப்பு உள்ளதால் அதன் மூலம் இந்த கோடை காலத்தை சமாளித்து விடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு சேர்வலாறு அணை பழுது பார்க்கும் பணி நடந்ததால் பாபநாசம் அணையில் நீர் திறக்கப்பட்டு வற்ற வைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X