என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் காதல் திருமணம் செய்த வாலிபருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்
Byமாலை மலர்19 March 2019 4:06 PM GMT (Updated: 19 March 2019 4:06 PM GMT)
காதல் திருமணம் செய்த கொண்ட வாலிபருடன் கல்லூரி மாணவி கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட். இவருடைய மகள் மோனிஷா (வயது21). இவர் கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு மோனிஷா திடீரென மாயமானார். அவர் நகை, பணத்துடன் மாயமாகி விட்டதாக அவருடைய தாய் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்து இருந்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் மோனிஷா தன்னுடன் படிக்கும் வலங்கைமான் அருகே உள்ள நரசிங்கமங்கலத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் விக்னேஷ் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோனிஷா, தனது காதல் கணவர் விக்னேசுடன் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் மோனிஷா, விக்னேஷ் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்த காதல் ஜோடி, பாதுகாப்பு தர வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தனது கணவர் வீட்டுக்கு செல்வதாக மோனிஷா கூறியதை அடுத்து, இருவரையும் விக்னேசின் தந்தை ரங்கசாமியுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். #tamilnews
கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவை சேர்ந்தவர் ரூஸ்வெல்ட். இவருடைய மகள் மோனிஷா (வயது21). இவர் கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு மோனிஷா திடீரென மாயமானார். அவர் நகை, பணத்துடன் மாயமாகி விட்டதாக அவருடைய தாய் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் அளித்து இருந்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் மோனிஷா தன்னுடன் படிக்கும் வலங்கைமான் அருகே உள்ள நரசிங்கமங்கலத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் விக்னேஷ் (21) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோனிஷா, தனது காதல் கணவர் விக்னேசுடன் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் மோனிஷா, விக்னேஷ் ஆகியோரிடம் விசாரித்தனர். அப்போது தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்த காதல் ஜோடி, பாதுகாப்பு தர வேண்டும் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தனது கணவர் வீட்டுக்கு செல்வதாக மோனிஷா கூறியதை அடுத்து, இருவரையும் விக்னேசின் தந்தை ரங்கசாமியுடன் போலீசார் அனுப்பி வைத்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X