search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட நர்ஸ் ஏஞ்சலின்
    X
    கொலை செய்யப்பட்ட நர்ஸ் ஏஞ்சலின்

    வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து நர்ஸ் படுகொலை - 6 பவுன் நகையுடன் தப்பிய தம்பதி

    கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து நர்சை படுகொலை செய்து 6 பவுன் நகையுடன் தப்பிய தம்பதியினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சவுரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்தன். இவரது மனைவி மேரி ஏஞ்சலின் (வயது 70).

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒருவர் சென்னையிலும், மற்றொருவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் வசித்து வருகிறார்கள்.

    விஜய்ஆனந்தன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேரி ஏஞ்சலின் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக அருகிலேயே மேலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டுக்கு வந்த ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் மேரி ஏஞ்சலனிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டு விசாரித்துள்ளனர்.

    பின்னர் நேற்று இரவு 9.30 மணிக்கு அந்த பெண்ணும், வாலிபரும் மீண்டும் வீட்டுக்கு வந்து மேரி ஏஞ்சலினிடம் வீட்டை பார்க்கவேண்டும் என கேட்டனர். உடனே மேரி ஏஞ்சலின் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை காட்டுவதற்கு சென்றார்.

    வெகுநேரமாகியும் மேரி ஏஞ்சலின் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த விஜய் ஆனந்தன் அவரை தேடிச் சென்றார். அப்போது வீட்டுக்குள் மேரிஏஞ்சலின் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின், 1 பவுன் கம்மல் என 6 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அவர் வைத்திருந்த செல்போனையும் காணவில்லை.

    இதுகுறித்து தகவலறிந்ததும் குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் பெருமாள், உதவி கமி‌ஷனர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சம்பவஇடத்தின் அருகே சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டிருந்தது. இதில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    விஜய் ஆனந்தன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரால் சரியாக பேச முடியவில்லை. வீடு வாடகைக்கு வந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது அவருக்கு தெரியவில்லை.

    கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை சேகரித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூரில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது,

    இந்நிலையில் பீளமேட்டில் பெண்ணை கொன்று நகை கள் கொள்ளையடிக்கப்பட் டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×