search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.எஸ்.புரத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை
    X

    ஆர்.எஸ்.புரத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை

    கோவை ஆர்எஸ் புரத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை வேலாண்டி பாளையம் ஆனந்தா காலனியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் மணிகண்டன் (வயது 30). பெயிண்டர். இவருக்கு பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் மணிகண்டன் ஆர்.எஸ். புரத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு மணிகண்டன் வேலை செய்யும் கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அங்குள்ள காவலாளி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    இதேபோன்று கோவை போத்தனூர் சீனிவாசா நகரை சேர்ந்தவர் மோகன் (54). இவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். போத்தனூர் பாரதி நகரை சேர்ந்த அந்தோணி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×