search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் என்ஜினீயர் மர்ம மரணம்
    X

    நாகையில் என்ஜினீயர் மர்ம மரணம்

    நாகையில் தனியா வீட்டில் இருந்த என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை வெளிபாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் என்ஜினீயர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு சுதன்ராஜ் (6) என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று கொண்டனர். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மதுபழக்கத்துக்கு ஆளான ராஜ்குமார் சம்பவத்தன்று தனியாக வீட்டில் இருந்தபோது மர்மமான முறையில் இறந்து விட்டார். அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் வெளிபாளையம் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வீட்டில் வந்து பார்த்தபோது ராஜ்குமார் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×