search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் மாயம்
    X

    ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் மாயம்

    ஈரோட்டில் வீட்டை விட்டு வெளியே சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு சோலார் இரணியன் வீதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் பத்மபிரியா (வயது 19).

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாராம். ஆனால் இவர் இன்னும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் எங்கு போனார். என்ன ஆனார் என தெரியவில்லை.

    இது குறித்து பத்மபிரியாவின் தந்தை குமார் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×