search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவர் குடித்து விட்டு வந்ததால் தகராறு- இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    கணவர் குடித்து விட்டு வந்ததால் தகராறு- இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

    கோவை அருகே கணவர் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால் மனவேதனையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை அருகே உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கார்த்திகேயன் குடி போதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த தீபா வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தீபாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 5 வருடத்தில் தீபா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×