search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
    X

    பாகூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

    பாகூரில் கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் ரூபாய் நோட்டுகளை மட்டும் கொள்ளையடித்து கொண்டு சில்லரை காசுகளை வீசி சென்றனர்.

    பாகூர்:

    பாகூர் மார்க்கெட் தெருவில் 4 முனை சந்திப்பில் பூலோக மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் தினமும் அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம். கடந்த 6 மாதத்துக்கு முன்பு உண்டியல் திறக்கப்பட்டது. அதன்பிறகு உண்டியல் திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை கோவில் பூசாரி அப்பு பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வழக்கம் போல் பூசாரி அப்பு பூஜை செய்ய கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் காணாமல் திடுக்கிட்டார். அந்த உண்டியல் கோவில் பின்னால் கிடந்தது. உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூபாய் நோட்டுகள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சில்லரை காசுகள் சிதறி கிடந்தன.

    இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. வியாபாரிகளும், பொதுமக்களும் கோவிலுக்கு திரண்டு வந்து பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளானர்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலுக்கு பின்புறமாக மதில் சுவர் ஏறி குதித்து உண்டியலை எடுத்து சென்று பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட இடம் எப்போதும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகும். மேலும் போலீஸ் நிலையமும் அருகிலேயே உள்ளது. அப்படி இருக்க மர்ம நபர்கள் துணிகரமாக கோவிலில் உள்ளே புகுந்து உண்டியலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×