என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியகுளம் அருகே விபத்து - வாலிபர் பலி
தேனி:
பெரியகுளம் அருகே உள்ள சரத்துப்பட்டி வசந்த நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். அவரது மகன் அழகுமுருகன் (வயது21). இவர் தனது நண்பர் கெங்குவார்பட்டியை சேர்ந்த சூர்யாவுடன் மோட்டார் சைக்கிளில் சோத்துப்பாறை அணைக்கு சென்றனர். அந்த சாலையில் பாலம் பராமரிப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இதனை கவனிக்காமல் சென்ற 2 பேரும் மஞ்சள்துறை வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்தனர். படுகாயம்அடைந்த 2 பேரும் கூச்சல் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்தனர்.
உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அழகுமுருகன் இறந்தார். சூர்யா மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்