search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுமுடி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
    X

    கொடுமுடி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

    கொடுமுடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கொடுமுடி:

    கொடுமுடி அடுத்த கொளத்துப்பாளையம் புது காலனியை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சரண்யா (வயது 23). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். பின்னர் பூபதி வெளியே சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் தனியாக இருந்த சரண்யா மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பூபதி வீட்டு வந்து கதவை திறந்தார். அப்போது அவரது மனைவி சரண்யா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×