என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரமடை அருகே மரத்தில் கார் மோதி பட்டதாரி வாலிபர் பலி
Byமாலை மலர்17 March 2019 12:53 PM GMT (Updated: 17 March 2019 12:53 PM GMT)
காரமடை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிந்தார்.
காரமடை:
கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 23). பி.இ. பட்டதாரி. சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார்.
இவர் தனது நண்பர்கள் கவுசிகன், பிரதீப், சஞ்ஜய் ஆகியோருடன் கோவையில் இருந்து கல்லாறு நோக்கி காரில் சென்றனர். அப்போது கார் கரியம்பாளையம் காரமடை இடையே எம்.ஜி.ஆர் நகர் அருகில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மனோஜ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் மனோஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X