search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருப்புக்கோட்டையில் 2 பெண்களிடம் 11 பவுன் நகை அபேஸ்
    X

    அருப்புக்கோட்டையில் 2 பெண்களிடம் 11 பவுன் நகை அபேஸ்

    2 பெண்களிடம் 11 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    விருதுநகர்:

    அருப்புக்கோட்டை அருகே உள்ள சின்னபுளியம் பட்டி ரெங்கப்பன் தெருவைச் சேர்ந்தவர் மீரா (வயது 51). இவர் சாலையில் நடந்து சென்றபோது 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் திருடர்கள் நடமாட்டம் உள்ள பகுதி இது. நகைகளை அணிந்து செல்லாதீர்கள் எனக்கூறி உள்ளனர். மேலும் மீரா கழுத்தில் கிடந்த 8 பவுன் நகைகளை வாங்கி பேப்பரில் வைத்து மடித்துக் கொடுத்தனர்.

    அதனை பையில் வைத்துச் சென்ற மீரா வீட்டிற்கு சென்று பிரித்துப் பார்த்தபோது நகை மாயமாகி இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகையை அபேஸ் செய்த மர்ம னிதர்களை தேடி வருகின்றனர்.

    இதேபோல் அருப்புக்கோட்டை முத்துராமலிங்க நகரைச் சேர்ந்தவர் சாரதாதேவி (40). இவர் பஸ்சில் அருப்புக்கோட்டை டவுனுக்குச் சென்றார்.

    பஸ்சை விட்டு இறங்கிய சாரதாதேவி, பர்சை பார்த்தபோது அதில் வைத் திருந்த 3 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×