search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களின் பெயர்களை வெளியிடக்கூடாது: போலீசாருக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை
    X

    பாலியல் புகார் தெரிவிக்கும் பெண்களின் பெயர்களை வெளியிடக்கூடாது: போலீசாருக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை

    பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக புகார் தெரிவிக்கும் பெண்களின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியில் தெரிவிக்கக்கூடாது என டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றச்சாட்டு சம்பவம் தமிழகம் மட்டும் அல்லாமல் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பேட்டி அளித்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இதுதொடர்பாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்ட அரசாணையிலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிடப்பட்டதால் சர்ச்சை ஆனது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    காவல் நிலையங்களில் பாலியல் குற்றச்சாட்டு சம்பந்தமாக புகார் தெரிவிக்கும் பெண்களின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியில் தெரிவிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×