search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தூர் அருகே டிப்பர் லாரியில் மணல் அள்ளிய டிரைவர் கைது
    X

    மத்தூர் அருகே டிப்பர் லாரியில் மணல் அள்ளிய டிரைவர் கைது

    மத்தூர் அருகே அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் அள்ளிய டிரைவரை கைது செய்த போலீசார் லாரியின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த நடுப்பட்டு ஆற்றில் மர்ம நபர்கள் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு டிப்பர் லாரியை வழிமறித்து சோதனையிட்டனர். அதில் 3 யூனிட் மணல் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

    இதில் வேலூர் மாவட்டம் காக்கங்கரையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியின் உரிமையாளர் கோபி என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 
    Next Story
    ×