என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரத்தில் முன் அறிவிப்பு இல்லாத மின்தடை - மாணவர்கள் பாதிப்பு
Byமாலை மலர்16 March 2019 10:15 AM GMT (Updated: 16 March 2019 10:15 AM GMT)
ஒட்டன்சத்திரத்தில் முன் அறிவிப்பு இல்லாத மின்தடையால் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள் தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு முக்கிய வணிக நிறுவனங்கள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
நகர் பகுதியில் இரவு நேரங்களில் முன்னறிவிப்பில்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மற்றும் மாணவ, மாணவிகளும் தங்கள் பணிகளை செய்ய முடியாமலும், ஓய்வு எடுக்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுபற்றி மாயவன் கூறுகையில், இரவு நேர மின் தடையால் தற்பொழுது 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மின் தடையால் மாணவர்கள் தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இது பற்றி மின் வாரியத்திடம் புகார் கூறினால் நகர் பகுதிகளில் மின் டிரான்ஸ்பார்மர் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் மின் தடை தவிர்க்க முடியாது என்று கூறுகின்றனர்.
இந்த மின்தடையை பயன்படுத்தி திருட்டு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்படாத மின் தடையை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றார்.
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு முக்கிய வணிக நிறுவனங்கள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள், நீதிமன்றங்கள் என பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
நகர் பகுதியில் இரவு நேரங்களில் முன்னறிவிப்பில்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் மற்றும் மாணவ, மாணவிகளும் தங்கள் பணிகளை செய்ய முடியாமலும், ஓய்வு எடுக்க முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுபற்றி மாயவன் கூறுகையில், இரவு நேர மின் தடையால் தற்பொழுது 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மின் தடையால் மாணவர்கள் தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இது பற்றி மின் வாரியத்திடம் புகார் கூறினால் நகர் பகுதிகளில் மின் டிரான்ஸ்பார்மர் மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனால் மின் தடை தவிர்க்க முடியாது என்று கூறுகின்றனர்.
இந்த மின்தடையை பயன்படுத்தி திருட்டு, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிவிக்கப்படாத மின் தடையை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X