search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறு அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து
    X

    செய்யாறு அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து

    செய்யாறு அருகே முன்விரோத தகராறில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்யாறு:

    செய்யாறு காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30).வெங்கட்ராயன் பேட்டையை சேர்ந்தவர் குமார் (40). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது.

    இந்நிலையில் ஆறுமுகம் நேற்று மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வழியாக நடந்து சென்றார்.அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த குமார் ஆறுமுகத்திடம் வீண் தகராறு செய்துள்ளார்.

    அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி பின்னர் கைகலப்பாக மாறியது இதில் ஆத்திரமடைந்த குமார் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து ஆறுமுகத்தை குத்தினார். இதனை கண்ட ஆறுமுகத்தின் சகோதரர்கள் நேதாஜி மற்றும் ரஜினிகாந்த் தட்டி கேட்டனர். அவர்களையும் குமார் பீர்பாட்டிலால் குத்தினார்.

    இதில் படுகாயமடைந்த 3 பேரும் செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இது குறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×