search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சிஐடியூ-அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சிஐடியூ-அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த கும்பலை கைது செய்யக் கோரி கடலூரில் சி.ஐ.டி.யூ., வாலிபர் சங்கம், மாதர் சங்கம்-மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiCase
    கடலூர்:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த கும்பலை கைது செய்யக் கோரி கடலூரில் சி.ஐ.டி.யூ., வாலிபர் சங்கம், மாதர் சங்கம்-மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகர செயலாளர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார்.

    சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கருப்பையா, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் சுப்புராயன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் அமர்நாத், அனைத்து குடியிருப்பு கூட்டமைப்பின் மாவட்ட பொதுசெயலாளர் மருதவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #PollachiCase
    Next Story
    ×