search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த வாலிபர் கைது
    X

    தேனி அருகே பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த வாலிபர் கைது

    தேனி அருகே பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே காட்டு நாயக்கன்பட்டியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகி 5 வயது குழந்தை உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த வி‌ஷயம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததால் அவர் சண்டை போட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால் கார்த்திக் அடிக்கடி இளம்பெண் வீட்டுக்கு சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் அந்த பெண் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    கணவர் பிரிந்து சென்று விட்டார். நான் கர்ப்பமாக உள்ளேன். எனவே என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கார்த்திக்கிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் தன்னை சந்தித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    Next Story
    ×