என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீராம்பட்டினத்தில் சோகம் உணவில் விஷம் கலந்து மகனை கொன்று தாயும் தற்கொலை
Byமாலை மலர்15 March 2019 5:22 PM GMT (Updated: 15 March 2019 5:22 PM GMT)
வீராம்பட்டினத்தில் மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
புதுவை வீராம்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஞானவேலு, மீனவர். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது33). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் லோகேஷ் (வயது15) மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதற்கிடையே ஞானவேலுவுக்கும் அவரது உறவினருக்கும் சொத்து பிரச்சினை ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்தது. சம்பவத்தன்று அதுபோல் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சீதாலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் மனநிலை பாதிக்கப்பட்ட மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என கருதிய சீதாலட்சுமி மகனை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள எண்ணினார். சம்பவத்தன்று உணவில் எலிமருந்தை (விஷம்) கலந்து லோகேஷ்க்கு கொடுத்து விட்டு மீதி இருந்த எலி மருந்தை சீதாலட்சுமி குடித்து விட்டார்.
இதில் மயங்கி கிடந்த மனைவி மற்றும் மகனை ஞானவேலு மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர அளித்தும் பலனின்றி தாய்-மகன் இருவரும் நேற்று மாலை இறந்து போனார்கள்.
இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் வீராம்பட்டினம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X